

மதுரை, கடச்சனேந்தல் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ராஜலஷ்மி என்பவரது பெயரில் உரிமம் பெறப்பட்ட தனியார் வளர்ப்பு யானை குஷ்மா
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர்ந்து 4 கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முறையே 4, 6, 8, 11 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி , மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதிகளுக்கு செல்லும் வகையில் அனுமதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி அனுமதி பெறப்பட்ட திருநெல்வேலி பாலபாக்கியநகர் பகுதியில் அமைத்துள்ள அருள்மிகு வீரசக்தி விநாயகர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் அதற்கு அடுத்த நாள் V M நகர் , மாதா மளிகை எதிரில் பாலவேல் , சீதாலட்சுமி தம்பதியினருக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்டு கிரகபிரவேச நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குஷ்மா யானையை எந்தவித முன் அனுதியும் தலைமை வன உயிரின காப்பாளரிடம் பெறாமல் கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ளார் யானை உரிமையாளர் ராஜலஷ்மி (தனி நபர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பல்வேறு காரணங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் அனுமதியே பெறாமல் கலந்து கொள்ள வைத்துள்ளனர்).
இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருவதனை தொடர்ந்து வன உயிரின ஆர்வலர்கள் வனத்துறையின் உயர் மட்ட அதிகாரிகள் வரை ஆதாரங்களை அனுப்பி வைத்தனர் . இதனை தொடர்ந்து திருநெல்வேலி வனத்துறையின் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இவ்வளவு பிரச்சனைக்கு பின்னரும் குஷ்மா யானையை கடந்த 6-ம் தேதி மதுரை தவிட்டு சந்தை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேடசாமி (எ) யானைக் கருப்பணசாமி கோவில் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்று மாகாளி பட்டி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சட்ட விதிகளை மீறி இரவு நேர ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வல கூட்டத்தின் நடுவில் நடத்தி அழைத்து சென்றுள்ளனர்.
இந்த யானைக்கு வயது சுமார் 70-யை கடந்திருக்கும் என்றும் கடந்த 2016-ம் ஆண்டு உரிமச்சான்று புதுப்பித்தலின் போது முறைகேடு செய்து வயதை குறைத்து உரிமச் சான்றை புதுப்பித்துள்ளதாகவும் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றார்.
அனுமதி கடிதத்தில் தலைமை பாகனாக காட்டப்பட்டுள்ள அழகர்சாமி மதுரை ரூபாலி யானைக்கு பாகனாக இருந்து அந்த யானை பறிமுதல் செய்யப்படும் போது யானையை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடி வன உயிரின சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அழகர்சாமி பெயரிலேயே அனுமதி கடிதம் பெறப்பட்டது எப்படி என்றும் ஒரே ஒரு கால்நடை மருத்துவரது தகுதி சான்றை வைத்து நான்கு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறப்பட்டது குறித்தும் வனத்துறையின் மாநில தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினர் , யானை உரிமையாளர் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எச்சம் வன ஆவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.