
விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெசிந்தா ஞானகுமாரி . இவர் ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பது , காயம்பட்ட தெருநாய்களை மருத்துவ சிகிச்சை அளித்து வீட்டில் வைத்து பாதுகாத்து மீண்டும் அதே இடத்தில் கொண்டு சென்று விடுவது என விலங்குகளுக்கான சேவை செய்து வந்துள்ளார் .
இவரது செயல்பாடுகளை பிடிக்காத அதே பகுதியை சேர்ந்த ஒருசிலர் இவர் காதுபட ஆபாசமாக பேசுவது அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வது என அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மே 11-ம் தேதி 4 பெண்கள் இவரது வீட்டின் கதவுகளை சேதப்படுத்தி உள்ள நுழைந்து இவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் இல்லாமல் இவரது லேப்டாப் , செல்போன் போன்றவற்றை சேதப்படுத்தி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் காயப்பட்ட ஜெசிந்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது .
இந்த தகவல் மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணைக்காக SI ஜோதி மற்றும் காவலர் ராம்குமார் ஜெசிந்தா வீட்டிற்கு சென்று குற்றச்சாட்டுக்கு உள்ளன நபர்களுக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஜெசிந்தா உதவி கோரி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிடுள்ளார் . அதில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் இவர் வளர்க்கும் நாய்களை கொன்றுவிட்டதாகவும் இவருக்கும் கொலைமிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் இவர்களுக்கு காவல்துறையினரும் ஆதரவாக பேசி வருவதாகவும் இது தொடர்பாக தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் உட்பட பல்வேறு அரசு அமைப்புகளுக்கும் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.