கோக்கு மாக்கு
Trending

பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் அருகே யானை தொல்லை: பொதுமக்கள் புகார்

திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகள், அங்குள்ள மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

யானைகள் நடமாட்டத்தால் தங்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே வனத்துறை உடனடியாக தலையிட்டு யானைகளை குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button