செய்திகள்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் மறைவுக்கு முதலவர் இரங்கல்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவர் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜாவின் தாயார் ஆவார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரேணுகா தேவி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

ரேணுகா தேவி அவர்களது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், “அண்ணன் டி.ஆர். பாலுவின் துணைவியார் ரேணுகா தேவி மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், அண்ணன் டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button