கோக்கு மாக்கு

சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

நத்தம் அருகே வனத்துறை அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் அருவி உள்ளது. இவ்வழியாக மலையூரில் வசிக்கும் மக்கள் மட்டும் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி உள்ளதால் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள், கார் மற்றும் பைக்குகளில் வந்து அருவி பகுதியில், அசைவ உணவுகளை சமைத்து மது அருந்தி கும்மாளமிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி வழியாக கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் காலி மது பாட்டில்களை வனப்பகுதிக்குள்ளேயே விட்டுச் செல்கின்றனர். எனவே இது குறித்து வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button