
திண்டுக்கல்லில் வேடப்பட்டி பகுதியில் வாழ்ந்த மூர்த்தி, நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் தினமும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வந்தார்.அதேபோல், பாரதிபுரத்தில் வசிக்கும் சரவணனும் கால் பிரச்சனை காரணாமாக அவசர உதவி தேவைப்பட்டவர்.
இவர்கள் நிலையை அறிந்த திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கார்த்திக், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் காவலர்கல் தனியார் அறக்கட்டளை உதவியுடன் இருவருக்கும் ஊனமுற்ற தள்ளுவண்டி மற்றும் வாக்கர் அன்பளிப்பாக வழங்கினர்.
இருவரும் காவல்துறையினரின் உதவிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.