
சமூக வலைதள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி – சாலை மறியல் – அடிதடி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள AMS மஹாலில் நேற்று இரவு முதல் ஒரு கும்பல் சமூக வலைதள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி என்ற பெயரில் உரிய அனுமதி இன்றி கூட்டம் சேர்த்துள்ளனர்.
அவர்களுக்கு சிறப்பு விருந்து மற்றும் பண பலன்கள் தருவதாக கூறி சுமார் 300 -க்கும் மேற்பட்ட நபர்களை கூட்டமாக சேர்த்து கூறியபடி எதுவும் செய்யாதது குறித்து கேள்வி எழுப்பியதால் அடிதடி கலவரம் ஏற்பட்டது.
தாடிக்கொம்பு காவல் நிலைய அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருவாய் துறையினர் அனுமதி வழங்காத நிலையில் யாருடைய அனுமதியின் படி இந்த நிகழ்ச்சி நடந்தது என்பதனை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சமூக வலைதள பிரபலங்கள் கோரிக்கை