செய்திகள்

விசைத்தறி தொழிலாளர்களின் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பின் வாபஸ் பெறப்பட்டது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை கூலி உயர்வானது ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது வழக்கம். கடந்த மாதத்தோடு ஒப்பந்த அடிப்படையிலான இரண்டு வருடம் முடிந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதில் கடந்த வாரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகளும் விசைத்தறி தொழிலாளர் நல மாவட்ட அலுவலர், கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்பேச்சு வார்த்தையில் 10 சதவீத கூலி உயர்வு பேசி முடிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில் பங்கேற்ற சிஐடியு தொழிற்சங்கம் ஒப்பந்தத்தின் உள்ள 10 சதவீத கூலி உயர்வினை ஏற்க இயலாதெனவும் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் இராஜா போராட்ட குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆய்வாளர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button