செய்திகள்டிரெண்டிங்
Trending

சங்கரன்கோவில் அருகே மது விருந்துக்கு சென்றவர் மர்ம மரணம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஜமீன் இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் திருமலை குமார். திருமலை குமார் அப்பகுதியில் ஜேசிபி இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அங்கு உள்ள தோட்டம் ஒன்றிற்கு மது விருந்துக்கு செல்வது வழக்கம், சம்பவ தினத்தன்று மது விருந்தில் கலந்து கொண்ட திருமலை குமாரின் நண்பர்கள் அனைவரும் இரவு வீட்டுக்கு சென்ற பின்பு, தனியாக இருந்த திருமலை குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், முதலுதவி செய்ய ஆளில்லாததால் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் திருமலை குமாரை மற்ற நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து விட்டதாகவும், உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடன் இருந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பனவடலிசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button