கோவை மாவட்டத்தில் புகார்களை ஆட்சியரிடம் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கூட்டமாக வருகின்றனர். ஆட்சியரிடம் நேரில் மனு கொடுக்க அனுமதி இல்லாததால் அலுவலக வளாகத்தில் உள்ள பெட்டியில் மனுக்களை போட்டு செல்கின்றனர்.இந்நிலையில் பொதுமக்கள் நேரில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டது. இதன்படி தற்போது பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை கோவை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க 9487570159 என்ற வாட்ஸ்-அப் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் புகார்கள் மீது விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உறுதியளித்துள்ளார்.
Read Next
விமர்சனங்கள்
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
விமர்சனங்கள்
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
அரசியல்
June 6, 2024
பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 6, 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
June 6, 2024
பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை
Related Articles
கடலூர்: பண்ருட்டியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சோகம்!
May 15, 2024
இப்ப புரிகிறத ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம்னு !! ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்…
October 12, 2021
Check Also
Close
-
ஆத்தி !! எத்தன கோடி !! வசமாக சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ்December 7, 2021