செய்திகள்

நேற்று சாலை விபத்தில் உயரிழந்த தூத்துக்குடி காவலருக்கு எஸ். பி.ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்

தூத்துக்குடி மாவட்டம்:17.07.2021*
தருவைக்குளம் காவல் நிலைய காவலர் தெய்வத்திரு.கனகவேல் அவர்கள் சாலை விபத்தில் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.*

தருவைக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் திரு. கனகவேல் (26) அவர்கள், அவரது சொந்த ஊரான சூரங்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு, தருவைக்குளம் காவல் நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வடக்கிலிருந்து தெற்காக திரும்பி வரும்போது பாலார்பட்டி விலக்கில் வந்தபோது எதிரே வந்த டாட்டா ஏஸ் என்ற வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.*

இன்று (17.07.2021) அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.*
அவரை தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், மாவட்ட ஆயுத்ப்படை காவல் துணை கண்காணிப்பளார் திரு. கண்ணபிரான், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், விளாத்திகுளம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு. முருகன், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா, ஆயுதப்டை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து, தூத்துக்கு நகரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜன், தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சரவணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.*

பின் அவரது உடல் கோவில்பட்டி இலுப்பையூரணி, மறவர் காலணியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்படுகிறது.*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button