ஆன்மீகம்செய்திகள்

சங்கரன்கோவிலில் தடையை மீறி கோவிலிக்குள் செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று பல்வேறு விதமான பூஜையுடன் பக்தர்கள் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தமிழ் நாடு அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடையை மீறி திருக்கோவில் உள்ளே செல்ல ஆலய நுழைவு போராட்டத்தில் முயன்ற போது காவல்துறையினருக்கும் இந்து முண்ணனியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button