க்ரைம்செய்திகள்

காவல் நிலையத்தில் வைத்தே கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கீழநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். 21 வயதான இவர் மீீது ஆடு, பைக் திருடிய வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆடு திருடிய வழக்கு ஒன்றிற்காக பிரகாஷ் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் இருந்த போது காவல்துறையினர் அடித்து விடுவார்களோ என்று அச்சம் அடைந்த பிரகாஷ். காவல் நிலையத்தில் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்நிகழ்வை கண்ட காவலர்கள் உடனடியாக பிரகாஷை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் வைத்தே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சங்கரன்கோவில் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் காவல் நிலையம் குறித்த தவறான புரிதலுடன் கூடிய பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button