செய்திகள்

சங்கரன்கோவிலில் நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய BIS ஹால்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சங்கரன்கோவில் நகை வியாபாரிகள் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள BIS ஹால்மார்க் திட்டத்தில் HUID என்ற முறையில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும், இந்த புதிய முறையில் BIS ஹால்மார்க் சீல் வைப்பதற்கு கால தாமதம் ஏற்படுவதாகவும். HUID முறையில் வணிகம் செய்வது சிறு நகை வியாபாரிகளுக்கு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும் HUID நடைமுறை பயன்படுத்தப்படும் போது சிறு நகை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய HUID முறை நடைமுறைப் படுத்தப்படும் போது அவசர காலங்களில் நகை விற்பனை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு HUID முடிவை திரும்பப் பெற வேண்டும் இல்லையேனில் அதில் நகை வியாபாரிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகரில் 60க்கும் மேற்பட்ட நகை வியாபாரிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட நகை உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button