க்ரைம்செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தந்தையை தொரட்டி அரிவாளால் வெட்டிய மகன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (70) இவரது மகன் முருகன் (31) தந்தை, மகன் இருவருக்கும் குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தந்தை, மகன் இருவரும் சேர்ந்து குடித்து வந்தனர். மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மகன் முருகனை தந்தை கணேசன் தொரட்டி அரிவாளால் வெட்ட முயன்றார். இதில் சுதாகரித்த முருகன் தந்தையிடம் இருந்த தொரட்டி அரிவாளை பிடிங்கி தந்தை கணேசனை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த கணேசன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய முருகனை கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button