செய்திகள்

விசாரணை வளையத்தில் கே.சி.பி நிறுவனம் மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் இல்லத்தை பல லட்சம் செலவில் புணரமைத்து கொடுத்துள்ளதற்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லம் அவரது சகோதரர்கள் அன்பரசன்,செந்தில்குமார் பொறியாளர் சந்திரபிரகாஷ் மற்றும் மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் இல்லம், மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் காந்திமதி இல்லம், உதவி பொறியாளர் சரவணன் இல்லம், உதவி பொறியாளர் ரவி இல்லம்
உள்ளிட்ட 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.
இதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில்
லஞ்ச ஒழிப்பு சோதனைக்குள்ளான சந்திரபிரகாஷின் கே.சி.பி நிறுவனம் மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் இல்லத்தை பல லட்சம் செலவில் புணரமைத்து கொடுத்துள்ளதற்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளின் அரசு குடியிருபுகளை பொதுப்பணித்துறை மட்டுமே செய்யக்கூடிய இந்த பணிகளை கேசிபி இன்ஜினியரிங் முறைகேடாக பயன்படுத்தி செய்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தலைமை பொறியாளர் இல்லத்தை கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனம் பல லட்ச ரூபாய் செலவு செய்து புணரமைப்பு செய்து கொடுத்துள்ளது. இதற்காக கேசிபி இன்ஜினியரிங் நிறுவனம் புணரமைப்பு செய்ய கட்டுமான பொருட்கள் வாங்கிய பில்களில் நகல் வெளியாகி உள்ளது.
அரசு கட்டிடங்களை வழக்கமாக பொதுப்பணித்துறையே சரி செய்து கொடுக்கும் நிலையில் கே.சி.பி நிறுவனம் மாநகராட்சி அதிகாரிகளின் அரசு குடியிருப்பை நவீன வசதிகளுடன் புணரமைப்பு செய்து கொடுத்துள்ளது. வாஸ்து நிபுணர்கள் ஆலோசனையுடன் கே.சி.பி இஞ்சினியரிங் நிறுவனம் புணரமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமும் பல லட்சம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளதால் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button