செய்திகள்

திருமங்கலத்தில் இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை புறக்கணித்து மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகின்றது
இந்த தேர்வை பயிற்சி ஆசிரியர்கள் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள் மேலும் அவர்கள் கூறுகையில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் தங்களுக்கு நூறு மதிப்பெண்களுக்கு வெறும் ஒற்றை இலக்க எண்ணை மதிப்பெண்னாக கொடுத்ததாக கூறி இன்று நடைபெறுகின்ற இந்த தேர்விலும் ஒற்றை இலக்க மதிப்பெண் தான் வரும் என்ற பயத்தால் இன்று நடைபெறுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள் இதனால் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவலறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்ட இரண்டாம்நிலை ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உங்களுக்கு மதிப்பெண் வழங்க அரசுக்கு பரிந்துரைப்பதாக கூறினார்கள் இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத சென்றார்கள்.

செய்திகள் : நீதிராஜன், திருமங்கலம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button