செய்திகள்

ஆசிரியர் பட்டயத் தேர்வு ஆன்-லைனில் நடத்தவும், மதிப்பெண்களை உரியமுறையில், சரியான மதிப்பெண்களை அளிக்கக்கோரி போராட்டம் செய்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாயில் முன்பு ,40க்கும் மேற்பட்ட பயிற்சிப் (ஆசிரியர்)பள்ளியில் பயிலும் மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
பள்ளி வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர் .

ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவிகள் , ஆன்-லைனில் தேர்வு நடத்தக் கோரியும் , தாங்கள் எழுதிவந்த தேர்வில் மதிப்பெண்கள் ஒற்றை இலக்கத்தில் அளித்ததை கண்டித்தும் , தேர்வினை கொரோனா காலம் என்பதால் , காலம் தாழ்த்தி நடத்தக் கோரியும் , பள்ளி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி பேச்சுவார்த்தை நடத்தியும் , சமரசம் ஏற்படாததால் காவல்துறையினர் அவர்களை அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி , 50க்கும் மேற்பட்ட மாணவிகளை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறும் போது , தாங்கள் கூறும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றாவிட்டால் நாள் தோறும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button