க்ரைம்செய்திகள்

நாகை அருகே பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த 62 வயது மூதாட்டியை அடித்துக்கொலை செய்த 65 வயது முதியவர் கைது

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேப்பஞ்சேரியை சோ்ந்த மாணிக்கம் மனைவி அம்பிகா (62). மாணிக்கம் ஏற்கெனவே இறந்த நிலையில். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அம்பிகா, திருக்குவளையை அடுத்த நத்தபள்ளத்தில் தனது சகோதரா் ராஜேந்திரன் வீட்டின் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவா் நேற்று தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தாா். இதுகுறித்து திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் நத்தப்பள்ளம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சீனிவாசன் (65) என்பதை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான் மது போதையில் இருந்த பொழுது, அம்பிகாவிடம் சில்மிஷம் செய்ததாகவும், தனது பாலியல் இச்சைக்கு ஒத்துழைக்காமல் அவர் மறுத்த நிலையில், கல்லால் தலையில் தாக்கியதாகவும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button