சினிமாசெய்திகள்

ரசிகர்களின் வெறிச்செயலால் ரஜினியை கைது செய்ய புகார்

நடிகர் ரஜினிகாந்த்தை கைது செய்யக்கோரி காவல்துறை இயக்குனரிடம் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதனால் ரசிகர்கள் 50 அடி உயரத்திற்கு ரஜினிகாந்த் போஸ்டரை அமைத்தனர்.

பின்னர் ஆடு ஒன்றை இழுத்து வந்து, பொதுவெளியில் பலநூறு பேர் முன்னிலையில் தலையை வெட்டி உடல் கிடந்த துடிதுடிக்க அந்த உடலை தூக்கி அப்படியே அதிலிருந்து பீறிட்டு வந்த ரத்தத்தை போஸ்டரில் பீய்ச்சி அடித்தனர்.

ரசிகர்களின் இந்த செயல் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. கி பலரையும் அதிர வைத்தது. இந்த சம்பவத்திற்கு ரஜினிகாந்த் நிச்சயம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பொது இடத்தில் இப்படி செய்த ரசிகர்கள் மீது கண்டனத்தை பதிவு செய்யாத ரஜினிகாந்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் தமிழ்வேந்தன் காவல்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button