அரசியல்செய்திகள்
Trending

எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு ‘ஐயோ, எம்மா அடி’ அலறல் சத்தம்!! – அதிமுகவினரிடையே தகராறு

தென்காசி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் முன்னாள் முதல்வர் எடபாடி பழனிச்சாமிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பில்வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக கட்சி சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் மற்றும் கே டி ராஜேந்திர பாலாஜி உடனிருந்தனர்.

வரவேற்பு முடிந்து செல்லும் வழியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஒழிக என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அங்கு இருந்த முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்களுக்கும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு கூட்டத்தை கலைத்து அனுப்பி வைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button