செய்திகள்

கோவில் விளக்கால் சிறுமி பலி

கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட சென்ற போது கோவில் விளக்கிலிருந்து ஆடையில் தீ பட்டு எரிந்ததில் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், மதிவதன தம்பதியினர், இவர்களுக்கு தெய்வவெனுசியா(6) மற்றும் தெய்வ கனுசியா(4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளன.வேல்முருகன் விவசாய வேலை செய்து வருகிறார், மதிவதன வீட்டில் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 21ந் தேதி காலை வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் தெய்வ வெனுசியா, தெய்வ கனுசியா உள்ளிட்ட நான்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தெய்வவெனுசியா கோயில் உள்ளே சென்று சாமி கும்பிட்டுவிட்டு திருநீர் பூசுவதற்காக உள்ளே சென்றபோது உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ எதிர்பாராதவதமாக தெய்வவெனுசியா ஆடையின் மீது பிடித்துள்ளது உடல் முழுவதும் நெருப்போடு அலறியடித்து வீட்டிற்கு தெய்வவெனுசியா ஓடி வந்துள்ளார். அவர் அணிந்திருந்த கவுன் நைலான் என்பதால் உடம்போடு தீ ஒட்டி அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது தாயார் என்ன செய்வது என்று தெரியாமல் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தெய்வ வெனுசியாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று உயிரிழந்தார்.சிறுமியின் உயிரிழப்பு ஜமீன் செங்கப்படை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button