செய்திகள்

மதுபிரியரே!!அக்.4 முதல் ஒரு வாரத்திற்கு டாஸ்மாக் கிடையாது

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில், அக்டோபர் 4 முதல் 9ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்.12ஆம் தேதியும் மதுவிற்பனைக்குத் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அக். 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

ஏனைய 28 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அக். 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

எனவே, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக். 4 காலை 10 மணி முதல் அக். 6 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் அக். 7 காலை 10 மணி முதல் 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக். 12 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதன்படி, மேற்படி நாள்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button