செய்திகள்

மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் : தம்பதியினர் இருவரும் மின் கம்பியால் பரிதாபமாக உயிரிழந்தனர்!!

 நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதியர் பரிதாபமாக பலி. மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சோகம்.
 

நாகை அடுத்துள்ள அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேலு. இவரும் இவரது மனைவி ராஜலட்சுமியும் நாகை துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக முன் உணவு தயார் செய்வதற்காக ராஜலட்சுமி பாத்திரத்தில் நண்டு எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் வீட்டு வழியாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி அறுந்து ராஜலட்சுமியின் மேல் விழுந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஓடி வந்த பழனிவேலு தனது மனைவியை காப்பாற்ற முயன்று மின் கம்பியை கையால் தட்டியுள்ளார்.

அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் உயிரிழந்த கணவன் மனைவி இருவரையும் நாகை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மின் விபத்து குறித்து நாகை நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒரு சேர உயிரிழந்த சம்பவம் அந்தனபேட்டை கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #நாகை #மின்கம்பி #Nagapatnam

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button