செய்திகள்

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 80 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட
மாற்றுத்திறனாளிகள் 80 பேர் கைது

உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி பொள்ளாச்சியிலும் சப் கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்த அமைப்பின் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில்,
மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகையை தெலுங்கானா, புதுச்சேரி போல் ரூ. 3 ஆயிரமாக உயர்த்தியும், கடும் ஊனத்திற்கு ரூ. 5 ஆயிரமும் வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சிகளில் தனிக்குழு அமைத்து அரசாணைப்படி 4 மணி நேர வேலை மற்றும் முழு வேலையை உறுதிப்படுத்த வேண்டும், நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசு உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகள் ரேசன் கார்டுகளை மாதம் 35 கிலோ அரிசி வழங்கும் கார்டுகளாக மாற்றிட வேண்டும், வீடு இல்லா மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும், கிராமங்களில் முகாம் நடத்தி அடையாள சான்று இல்லாதவர்களுக்கு உடனடியாக சான்று வழங்க வேண்டும், பேருந்து பயண உதவியாளர், ரயில் பயண சலுகை ஆகியவற்றுக்கான சான்றிதழை உள்ளூரிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் முடிவில் மறியலில் ஈடுபட முயற்சித்த மாற்றுத்திறனாளிகள் 20 பெண்கள் 60 ஆண்கள் என மொத்தம் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button