தண்டவாளத்தில் நெல் மூட்டைகள்
ரயில்வே போலீசார் விசாரணை
திருப்பூர் அருகே தண்டவாளத்தில் நெல் மூட்டைகள் சிதறிக் கிடந்தது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ஊத்துக்குளி பகுதியில் ஏராளமான மூட்டைகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு தண்டவாளங்களுக்கு நடுவிலும், ஓரத்திலும் என 100க்கும் மேற்பட்ட மூட்டைகள் கிடந்துள்ளது. அந்த மூட்டைகளில் நெல் இருந்தது தெரியவந்தது. இது அரிசி கடத்தல் கும்பல் கைவரிசையா அல்லது கிடங்கிலிருந்து திருடப்பட்டதா என்பன உட்பட பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம் .