செய்திகள்

எம்.ஜி.ஆர்.க்கு நினைவஞ்சலி

எம்.ஜி.ஆர்.க்கு நினைவஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு பொள்ளாச்சியில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க. வை உருவாக்கியவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். ன் 34வது நினைவு தினம் இன்று. இதனையொட்டி அ.தி.மு.க. வினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். ன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி நகரில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன், நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்களான ஜேம்ஸ் ராஜா, வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சூளேஸ்வரன்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கார்த்தி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இணைச்செயலாளர் நாகரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் முத்துக்குமார், இலக்கிய அணி மதிகணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button