செய்திகள்

தாயின் மறைவால் தனயன் தற்கொலை

தாயின் மறைவால் தனயன் தற்கொலை

பொள்ளாச்சி அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள பொங்களியூர் கந்தசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி காளியம்மாள் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 45 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சிவக்குமார் ஆழியார் மற்றும் பொங்காளியூர் பகுதிகளில் மாலை நேரம் பானிபூரி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அம்மா இறந்த துக்கம் தாங்க முடியாமல் இரவு நேரங்களில் அவரது சேலையை வைத்துக்கொண்டு தூங்கி வந்துள்ளார் சிவகுமார்.
இந்நிலையில் அதிகாலையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் நன்கு தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் விட்டத்தில் தனது அம்மாவின் சேலையால் தூக்குப்போட்டு சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த அவரது மனைவி இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இத்தகவல் கிடைத்ததும் கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button