கோக்கு மாக்குசெய்திகள்

5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

தூத்துக்குடி மாநகராட்சியில் 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

தூத்துக்குடி மாநகராட்சியில் 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சாருஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 480 பெறப்பட்டது. பரிசீலனையின்போது 9, 17, 28, 50, 56 ஆகிய வார்டுகளுக்கு தாக்கல் செய்தவர்களில் 5 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் 4 மனுக்கள் இரட்டைப் பதிவு மற்றும் ஒருவருக்கு தூத்துக்குடியில் வாக்குரிமை இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

வேட்பு மனுக்கள் வருகிற 7ம் தேதி (திங்கள்) மாலை 3மணி வரை திருப்ப பெறலாம். அன்றைய தினம் மாலையே வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். இதுவரை 3 தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்களுக்கான 2வது கட்ட பயிற்சி 10ம் தேதியும் 3ம் கட்ட பயிற்சி 18ம் தேதியும் நடைபெறும்.

வருகிற 19ம் தேதி அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும். பூத் சிலிப்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வழங்கப்படும் என்றார்.

செய்தியாளர் மாரி ராஜா,

தூத்துக்குடி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button