செய்திகள்

கருணை காட்டுங்க ஆபிஸர்…?

காயத்துடன் கண்ணீர்விடும் யானைக்கு கருணை காட்டுவீங்களா ஆபிஸர்…?

டாப்சிலிப்பில் காயத்துடன் திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது டாப்ஸ்லிப் வனச்சரகம். இச்சரகத்திற்கு உட்பட்ட கோழிக்கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் அருகே காட்டு யானை ஒன்று கடந்த 4 நாட்களாக ஒரே இடத்தில் சுற்றித் திரிகிறது.
வளர்ப்பு யானைகளை மேய்ச்சலுக்காக வனத்திற்குள் அழைத்துச்செல்லும் பாகன்கள் அந்தக் காட்டு யானையின் அருகே சென்று பார்த்துள்ளனர். இதில் அந்த யானையின் பின்னங்காலில் பெரிய அளவிலான காயம் ஒன்று இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த யானை வேறு எங்கும் செல்ல முடியாமல் ஒரே இடத்திலேயே கண்ணீர் வடித்தபடி நின்று கொண்டிருக்கிறது.
இதுகுறித்து அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால்
இன்று வரை அதிகாரிகள் யாரும் காயம்பட்ட யானையை கண்டுகொள்ளவில்லை.

வனத்திற்குள் சுற்றித்திரிந்து உணவு உண்ண முடியாமல் ஒரே இடத்தில் நின்று தவிக்கும் அந்த யானைக்கு வனத்துறையினர் உடனடியாக சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button