செய்திகள்

கிரிக்கெட் போட்டி

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு டி.சி.எல். தலைவர் தங்க கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நெகமத்தில் நடைபெற்றன. 2020 ஆண்டு முதல் அன்று கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நடைபெற முடியாமல் போனது. தற்போது அடுத்த சுற்றுக்கு அணிகளை தேர்வு செய்யும் போட்டிகள் இன்று துவங்கின.

கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் தலைமையேற்று போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடசித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் முகமது இப்ராஹிம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் நந்தவேல் முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் அழகு நாச்சிமுத்து, சதீஷ் பாபு, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சரவணக்குமார், துணை அமைப்பாளர் சங்கர் மற்றும் திலீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button