கோக்கு மாக்கு
Trending

கடமான் வேட்டை – ஒருவர் கைது – துப்பாக்கியுடன் தப்பிய முக்கிய குற்றவாளியை தேடிவரும் வனத்துறையினர்

நேற்று (06.09.2024 ம் தேதி ) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது காமராஜர் அணை பகுதிக்கு அருகில் திரு. பதர்தீன் த.பெ.அசன்லெப்பை என்பவருக்கு சொந்தமான பாறைப்பட்டி கிராம புல எண். 200/1பி, பட்டா எண். 3697 கொண்ட பராமரிப்பு இல்லாத தென்னந் தோப்பில் துப்பாக்கி கொண்டு பெண் கடமானை வேட்டையாடி கறி துண்டுகளாக வெட்டி கொண்டிருக்கும்போது மேற்படி குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகளில் A1 எதிரியான வெள்ளோடு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரது மகனான ஆல்வின் எடிசன் என்பவர் துப்பாக்கியுடன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். A2 எதிரியான முருகன், த/பெ.சக்திவேல், மாரியம்மன் கோயில் தெரு, ஆத்தூர் என்பவரை கைது செய்து கன்னிவாடி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு எண். 7/2024 பதிவு செய்யப்பட்டு, எதிரி மற்றும் பிடிபொருட்களை ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி, நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவு படி எதிரி திண்டுக்கல் சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார். மேற்படி வழக்கின் பிடிபொருளான பெண் கடமானை ஆத்தூர் அரசு உதவி கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவின் பேரில் கன்னிவாடி வனச்சரக அலுவலர், ஆத்தூர் அரசு உதவி கால்நடை மருத்துவர் மற்றும் சரக பணியாளர்கள் முன்னிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டது, தப்பி ஓடிய A1 எதிரி தேடப்பட்டு வருகிறார்.

இந்த நடவடிக்கையில் வனச்சரக அலுவலர் ஆறுமுகம் வனவர் வெற்றிவேல் வனக்காப்பாளர்கள் பீட்டர் ராஜா ராமசாமி திலகராஜ் மற்றும் வனப் பணியாளர்கள் தலைமையில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button