கோக்கு மாக்கு
Trending

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மண் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம், மட்டபிறையூர் கிராமத்தின் அருகே உள்ள சிறிய குன்றிலிருந்து மண் திருடப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மட்டபிறையூர் கிராமத்தின் அருகே வருவாய்த் துறைக்குச் சொந்தமான சிறிய குன்று உள்ளது. இந்தக் குன்றின் மீது வேம்பு, புங்கன், புளியன், பனை உள்பட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்த நிலையில், போளூர், புலிவானந்தல், கொழாவூர், கொம்மனந்தல் உள்ளிட்ட அருகிலுள்ள கிராமங்களில் வீடு கட்டி வரும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான மண்ணை உரிய அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரம் மூலம் இந்தக் குன்றிலிருந்து எடுத்து டிராக்டர், லாரி மூலம் எடுத்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மழைக்காலங்களில் சிறிய குன்றின் மீது மழைநீர் உள்வாங்குவதால், அருகிலுள்ள திறந்தவெளி விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இந்தக் குன்று அழிக்கப்பட்டு தற்போது நிலமாக மாற்றப்பட்டு வருவதால், மழைநீரை உள்வாங்காத நிலை ஏற்படுகிறது. இதனால், கிணறுகளில் நீர்மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button