கோக்கு மாக்கு

எலும்பு கூடாய் காட்சியளிக்கும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை கூடம்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமனையாகும்

இந்த மருத்துவமனையில் சங்கரன்கோவில் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 150 கிராமத்திலிருந்து ஆயிரங்களுக்கான நபர்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர், மகப்பேறு சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் இந்த மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

இந்த அறுவை சிகிச்சைகள் நடைபெறும் அரங்கமானது தற்பொழுது சேதம் அடைந்து எலும்பு கூடாக காட்சியளித்து வருகிறது சுற்றுப்புற சுவர்கள் அனைத்தும் இடிந்த நிலையில், சுவற்றிக்கு உள்ளே உள்ள கம்பிகள் எல்லாம் வெளியே தெரியுமாறு பார்ப்பதற்கு எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது .

இவ்வளவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த மருத்துவமனைக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து மாநில ஆய்வு குழுவீனர் வந்து மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு செய்து விட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எலும்பு கூடாய் காட்சியளிக்கும் கட்டடத்தினால் உயிர் சேதம் ஏதேனும் ஏற்படும் முன்னர் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றி, புது கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், நோயாளிகளின் உயிரை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த அறுவை சிகிச்சை அரங்கிற்கு மாற்று வழி ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த நிலையில் ஏற்கனவே சுமார் 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button