
திண்டுக்கல், சிறுமலையில் அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் (ரிசார்ட்கள்)- களில் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூல் வேட்டை நடத்தும் ரிசார்ட் நிர்வாகம்.
மேலும் வெளி மாநில அழகிகள் மூலம் விபச்சாரம் நடைபெறுவதாகவும், உயர்ரக போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக பயன்பாட்டுக்கு கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
உணவுப் பொருட்களின் விலை Five star ஹோட்டல்களில் விற்பனை செய்யும் அளவிற்கு விலைகளில் விற்பனை செய்வதாகவும், இது போன்ற விடுதிகளில் மதுபான விருந்துகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
இது போன்ற சட்ட விதி மீறல் நடவடிக்கைகளை மறைப்பதற்காகவே பெரும்பாலான விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது. விடுதிகளுக்கு தங்க வருபவர்களிடம் ஒரு அறைக்கு நான்கு பேர் வந்தால் தனித்தனியாக வாடகை வசூலிப்பதுடன் யாராவது ஒருவரிடம் மட்டுமே அடையாள அட்டை பெற்றுக் கொண்டு அனைவரையும் ரெஜிஸ்டரில் பதிவு செய்யாமல் அனுமதித்து வருகின்றனர்.
விடுதிகளில் தங்குபவர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டால் அனுமதி இன்றி இயங்கும் விடுதிகளில் உரிமையாளர்கள் மற்றும் நண்பர்கள் உடன் சேர்ந்து கொண்டு சுற்றுலா பயணிகளை அடித்து மிரட்டுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
இது போன்ற நடவடிக்கைகளால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதாகும் அவற்றை விடுதி நடத்துபவர்களே பஞ்சாயத்து செய்து முடித்து விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ரிசார்ட் நிர்வாகத்தின் சட்ட விரோத செயல்களால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சிறுமலைக்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு , ஏனைய கண்காணிப்பு மற்றும் உதவிடும் பொருட்டு மாவடத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறிவரும் சிறுமலையில் அனைத்து துறை சார்ந்த உதவி மையம் மற்றும் உதவி காவல் மையம் அமைக்க வேண்டும் என்றும் முறைகேடாக இயங்கிவரும் விடுதிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.