
யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் வழியாக யானை தந்தம் கடத்தி வரப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதனை சோதனை செய்தனர். அப்போது காரில் கடத்தி வந்த ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த போலீசார் யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதான 8 பேரும் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் யானை தந்தம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.