கோக்கு மாக்கு
Trending

வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பீகாரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது, நேபாளம், மியான்மர், வங்கதேசம் போன்ற வெளி நாடுகளில் இருந்து பலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதையடுத்து அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு நடவடிக்கையை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. வீடு, வீடாக சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
முழு விசாரணைக்கு பின்னர், அவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் விளைவாக, 35 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகள் மூலம் உயிரிழந்த 12.5 லட்சம் வாக்காளர்கள் (1.59 சதவீதம்) பெயர்கள் பட்டியலில் இன்னமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17.5 லட்சம் (2.2 சதவீதம்) பேர் பீஹாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டதும் தெரிய வந்துள்ளது. இது தவிர, 5.5 லட்சம் (0.73 சதவீதம்) வாக்காளர்கள் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த கணக்கீட்டின் படி, ஒட்டுமொத்தமாக 35.5 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். இது ஒட்டு மொத்த வாக்காளர் பட்டியலில் 4.5 சதவீதம் ஆகும். ஜூலை 25ம் தேதிக்குள் திருத்தப் பணிகளை நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிண​மூல் காங்​கிரஸ், இந்​திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்துள்​ளனர். இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி நீதிப​தி​கள் சுதான்ஷு துலி​யா, ஜோய் மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்​தது.

அப்​போது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு இடைக்​கால தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், வழக்கை விசா​ரணைக்கு ஏற்​றுக் கொண்​டனர். இந்த வழக்​கில் கடந்த 10-ம் தேதி விசாரணை தொடங்​கியது.

இருதரப்​பினரது வாதங்​களை கேட்ட பின்னர் இ நீதிப​தி​கள் சுதான்ஷு துலி​யா, ஜோய் மல்யா பாக்சி கூறிய​தாவது:

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை மேற்​கொள்ள அரசி​யலமைப்பு சட்​டம் அனு​மதி வழங்​கு​கிறது. இதை நாங்​கள் எதிர்க்​க​வில்​லை. ஆனால் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்கும் வேளை​யில் சிறப்பு திருத்தப்பணியை மேற்​கொள்​வது ஏன்? முன்​கூட்​டியே திருத்​தப் பணியை மேற்கொண்டு இருக்​கலாமே?

தற்​போது எந்த அடிப்​படை​யில் வாக்காளர் பட்​டியல் சிறப்பு திருத்தப்பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது என்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் விரி​வான விளக்​கம் அளிக்க வேண்​டும்.

ஆதார் அட்​டை, வாக்​காளர் அட்​டை, ரேஷன் அட்​டையை அடை​யாள ஆவணங்​களாக ஏற்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் பரிசீலிக்க வேண்​டும். இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் உரிய விளக்​கம் அளிக்க வேண்​டும்.

தேர்​தல் ஆணை​யம் தனது பதில் மனுவை ஒரு வாரத்​துக்​குள் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். அதன்​பிறகு மனு​தா​ரர்​கள் தங்​களது பதில் மனுக்​களை ஜூலை 28-ம் தேதிக்குள் தாக்​கல் செய்ய வேண்​டும்.

இப்​போதைய சூழலில் சிறப்பு திருத்​தப் பணிக்கு மனு​தா​ரர்​கள் தரப்​பில் இடைக்​கால தடை கோரப்​பட​வில்​லை. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​களை தொடர்ந்து மேற்கொள்ளலாம். அந்த மாநிலத்​தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்டியல் வெளி​யிடப்​பட இருக்​கிறது. அதற்​கு முன்​பாக ஜூலை 28-ம்​ தேதி வழக்​கின்​ அடுத்​த வி​சா​ரணை நடைபெறும்​. இவ்​வாறு நீதிபதிகள்​ உத்தரவிட்​டனர்…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button