ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செங்கனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை – செங்கோட்டை ரயில்வே சுரங்க பாதை உள்ளது.இந்த பாதையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது.இந்த கிராம மக்கள் அடிப்படை தேவைக்கு இந்த சுரங்க பாதையை கடந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இரண்டு நாட்களாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.தொடர்ந்து சுரங்க பாதையை சுற்றி ஊற்று இருப்பதனால் தண்ணீர் ஊறிக் கொண்டே உள்ளது.இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த கிராம மக்கள் தொடர்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு 105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சவப்பெட்டியை அந்த வழியாக கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்றனர்.இந்த கிராம மக்கள் மாற்று பாதை கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் ரேஷன் அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Next
3 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
3 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
3 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
3 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
4 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
4 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
4 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
4 days ago
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்
4 days ago
காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை – தீர்வு எப்போ? சமூக ஆர்வலர்கள் கேள்வி
4 days ago
பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு – இந்து அமைப்புகள் கண்டனம்
Related Articles
பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.
November 25, 2024
சோழவரத்தில் கிராம சபை கூட்டம்
November 24, 2024