
கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தபோது ரயிலில்
திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்ட போது
முன்பதிவுல்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த ரயில்வே காவல் நிலைய போலீசார் திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது யார்? எங்கிருந்து எங்கு கொண்டு செல்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்