
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும் ஆஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, இன்று சேலத்தில் உள்ள அவர் இல்லத்தில் எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் நிறுவனரும் தந்தை பேராயுருமான டாக்டர் ஜெயசிங் அவர்கள் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார், தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைந்ததும், போதகர் நலவாரியம் அமைத்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்த முன்னாள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், வேட்பு மனு தாக்கல் செய்திற்கான வாழ்த்துகளையும் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங் கூறினார். அவருடன் மாநில செய்தி தொடர்பாளர் ராஜேஷ், வட இந்திய ஒருங்கிணைப்பாளர் பேராயர் டாக்டர் மாதவன், மாநில செயலாளர் பேராயர் டாக்டர் சதீஷ், சேலம் மாவட்ட தலைவர் பேராயர் டாக்டர் செந்தில், மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.