க்ரைம்

சங்கரன்கோவிலில் காரில் கஞ்சா விற்பனை. இருவர் கைது, நான்கு பேர் தப்பி ஓட்டம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சம்பொட்டல்புதூர் பகுதியில் சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கிய போலீசார் காரை சோதனையிட்டனர். இதில் காருக்குள் 26 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 6 பேரில் 4 பேர் தப்பி ஓடிய நிலையில் திருநெல்வேலி பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ரசாக் மற்றும் சுடலை முத்து ஆகிய இருவரை சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர் கைது செய்து அவர்கள் ஓட்டி வந்த கார், ஒரு இருசக்கர வாகனம், 26 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பல இடங்களில் பகுதி வாரியாக நெல்லை, தென்காசி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விநியோகம் செய்து விட்டு சங்கரன்கோவில் பகுதிக்கு வந்த போது அவர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கிக் கொண்டது தெரிய வந்ததுள்ளது. மேலும் இந்த கும்பல் இறுதியாக புளியங்குடி அருகே உள்ள வனப்பகுதியில் கஞ்சாவை விநியோகம் செய்துள்ளதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றர். தப்பி ஓடிய நான்கு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button