செய்திகள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் மின்விளக்கு கோபுரம், ஒரு முறை காவு வாங்கியும் மெத்தனம் காட்டும் ஊழியர்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் பள்ளி மாணவிகள் விடுதி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நகராட்சி ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மின்சார விளக்கு கோபுரம் உள்ளது. இந்நிலையில் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணி தற்செயலாக மின் விளக்கு கோபுரத்தில் கை வைக்க அதில் அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. பயணி உடனடியாக சுதாரித்து தப்பியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பயணிகள் வந்து போகும் பயணிகள் நிழற்குடை என்பதால், உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த போது இதனை நகராட்சி நிர்வாகம் தான் கையாள வேண்டும் என்று மெத்தனமாக பதில் அளித்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற சங்கரன்கோவிலில் உள்ள ஒரு பராமரிக்க படாத மின் விளக்கு கோபுரத்தில் இருந்து வந்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. ஏற்கனவே ஒரு உயிரிழப்பு நடந்தும் சங்கரன்கோவில் நகராட்சி மற்றும் மின் வாரியத்துறை ஊழியர்கள் மீண்டும் மெத்தன போக்கில் செயல்படுவது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button