க்ரைம்

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்,இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (05.06.2021) தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தனிப்படையினர் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் தாளமுத்துநகர் கோமஸ்புரம் வடக்குப் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் தூத்துக்குடி நயினார்புரத்தைச் சேர்ந்த கொம்மையா மகன் யமஹா முருகன் (38), தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் ஜான்சன் பெலிக்ஸ் (25) மற்றும் இருவரோடு சேர்ந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தனிப்படை போலீசாரைப் பார்த்ததும் ஓடினர், அவர்களில் யமஹா முருகன் மற்றும் ஜான்சன் பெலிக்ஸ் ஆகிய இருவரைப் பிடித்தனர். அப்போது அவர்கள் இரு நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தனர். மேற்படி இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேற்படி எதிரிகள் இருவரையும் கைது செய்து நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button