க்ரைம்செய்திகள்

சங்கரன்கோவிலில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து பாண்டி. இவர் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மரியராஜ் என்பவருக்கும் முத்துப்பாண்டிக்கும் வழக்கு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மரியராஜிற்கும் முத்துப்பாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டியை மரியாராஜ் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த முத்து பாண்டி சம்பவத்தில் இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர், முத்துப்பாண்டியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த மரியராஜ் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மரியராஜ் மற்றும் முத்து பாண்டி கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் கூடுதல் தகவல் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button