க்ரைம்செய்திகள்லைஃப் ஸ்டைல்

கோவை மாவட்டம் , மேட்டுபாளையம் – தாயை பிரிந்த குட்டி யானை – வனத்துறையின் நெகிழ்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து அருகில் உள்ள விவசாயி பகுதியில் சுற்றி வந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானையை மீட்டு யானை கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குட்டி யானைக்கு இளநீர் குளுக்கோஸ் பால் பவுடர் ஆகியவற்றை கொடுத்து வந்து யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர் . வனத்துறை ஊழியர்கள் மூன்று குழுவாக பிரிந்து தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர் நான்கு பெண் யானைகள் புளியந்தோப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் 5 மணி நேரம் போராடி குட்டியானை மீண்டும் அதன் தாயிடம் சேர்த்து வைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button