க்ரைம்டிரெண்டிங்
Trending

சங்கரன்கோவில் அருகே இளைஞர் மர்ம மரணம், உறவினர்கள் சாலை மறியல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஜமீன் இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை குமார். இவர் நேற்று அருகே உள்ள தோட்டத்தில் நண்பர்களுடன் கறி விருந்தில் கலந்து கொண்டார். ஆனால் இரவு வீடு திரும்பாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வு முடிந்தபின்பு, உறவினர்களிடம் ஒப்படைக்க அழைத்தபோது, இறப்புக்கு உரிய காரணங்கள் தெரியாமல் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திருமலை குமாரின் நண்பர்கள் சந்திரன், முருகன், மணி மூவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமலை குமாரின் உறவினர்கள் இச்சம்பவத்தை கொலை வழக்காக மாற்றவும் இறப்புக்கு உண்டான காரணம் தெளிவுபடுத்தவும் கோரிக்கை விடுத்து சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பானது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button