திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்த ராஜாமணி 53. இவர் தற்போது நிலக்கோட்டையில் காமராஜர் நகரில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் கோட்டை ராணி இவர்கள் இருவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி, லோகேஸ்வரி என்ற பவித்ரா 2 மகள்களும், கோட்டைச்சாமி என்ற மகனும் உள்ளார்கள். இதில் ராஜேஸ்வரி திருமணம் செய்து தனது கணவரோடு தனியாக வசித்து வருகிறார். லோகேஸ்வரி என்ற பவித்ரா வயது 27. இவர் குளத்துபட்டியைச் சேர்ந்த அரிசி கருப்பன் வயது 30 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு என்ன கருத்து வேறுபாடு காரணமாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவருக்கும் சமாதானம் பேசியும் ஒத்து வராததால் இருவரும் பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து ராஜாமணி தனது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ரா, மனைவி கோட்டை ராணி, மகன் கோட்டை ராஜ் ஆகிய 4 பேர்களும் நிலக்கோட்டையில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டை ராணிக்கும் மகள் லோகேஸ்வரி என்ற பவித்ராக்கும் ஏற்கனவே திருமணம் செய்த அரசி கருப்பனோடு சேர்ந்து வாழ போவதாக பவித்ரா கூறியதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் ஒருவருக்கொருவர் கையில் அடித்துக் கொள்ளும்போது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ரா கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக தனது கணவர் ராஜாமணிக்கு கோட்டை ராணி போன் மூலம் லோகேஸ்வரி என்ற பவித்ரா கீழே விழுந்து மயங்கி கிடக்கிறார். ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் ஆட்டைப் பிடித்து வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. ராஜாமணி சம்பவ இடத்திற்கு வந்து தனது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ராவில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் கொடுத்தனர். இது குறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் படி கோட்டை ராணியை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்டன் நல்ல கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தி நிலக்கோட்டை சிறைச்சாலையில் அடைத்தனர். தாய் மகளுக்கு இடையே நடந்த சிறு தகராறு மகள் இறந்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
Read Next
2 weeks ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
2 weeks ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
2 weeks ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
2 weeks ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
3 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
3 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
3 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
4 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
4 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
December 4, 2024
பா சிதம்பரம் அவர்களின் 75 வது பிறந்தநாள்
September 16, 2020
இந்தியன் வங்கி இடமாற்றம் – புதிய கட்டிடம் திறப்பு
November 26, 2024
Check Also
Close
-
மார்கழி மாத பஜனைDecember 17, 2024