கோக்கு மாக்கு
Trending

நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலையில் குடிநீருக்காக பயன்படுத்தும் குளத்தின் அவல நிலை…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள கீழ ஆவாரம் தான் குளத்தில் இறந்தவர்கள் சடலங்களை புதைப்பதும் மற்றும் எரிப்பதும் வழக்கமான ஒன்று..கீழ ஆவாரம் தான் குளம் என்பது நீர் துறையின் கீழ் அந்த குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் செய்யப்படுகிறது,

மேலும் இதிலிருந்து மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது,

இதில் இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதாலும் மற்றும் புதைப்பதாலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோளாக இருக்கிறது…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button