க்ரைம்செய்திகள்

உறவினரை பார்க்க சென்றார் பெண்… வீட்டில் நடந்த சம்பவம்

தொழிலாளியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் தொழிலாளியான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்லதுரை வேலைக்கு சென்றபிறகு மருதம்மாள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மருதம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செல்லதுரை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button