செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப் படை பிரிவு வருடாந்திர ஆய்வு!!

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப் படை பிரிவு வருடாந்திர ஆய்வு!!

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு இ.கா.ப, அவர்கள் இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

ஓவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை இன்று (11.12.2021) திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு. பிரவின்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் 2021ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார்.

அவருடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உடனிருந்தார். அப்போது மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் உட்பட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Parade), பின் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு, அவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், ஷாமளாதேவி, பவித்ரா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button